ஏதன்ஸ் கூட்டறிக்கையை வெளியிட்டப் பின், திபெத் வளர்ச்சி பற்றிய 3வது கருத்தரங்கு 11ம் நாள் வெற்றிகரமாக நிறைவடைந்தது. சீன அரசவையின் செய்தி அலுவலகம், கிரேக்கத்திலுள்ளச் சீனத் தூதரகம், கிரேக்க-சீன வணிகச் சங்கம் ஆகியவை கூட்டாக இக்கூட்டத்தை ஏற்பாடு செய்தன.
திபெத்தின் நவீன வளர்ச்சியை முன்னேற்றி, திபெத்தின் பாரம்பரியப் பண்பாட்டைப் பாதுகாக்க சீன நடுவண் அரசும் சீனாவின் இதர பிரதேசங்களும் அளித்த கொள்கை ஆதரவையும் பொருள் உதவியையும் இக்கூட்டறிக்கை பாராட்டியது. திபெத்தின் எதிர்கால வளர்ச்சியின் மீது இது முழு நம்பிக்கை தெரிவித்தது.
2 நாள் கருத்தரங்கில் கிரேக்கம், சீனா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, நேபாளம் ஆகிய நாடுகளின் அரசு அலுவலர்கள், வல்லுனகள், அறிஞர்கள், தொழில் முனைவோர் முதலியோர், திபெத்தின் பல்வேறு துறை வளர்ச்சி பற்றி ஆராய்ந்து கலந்துரையாடினர்.