2012ஆம் ஆண்டில், உலகிலேயே மிக உயரமான விமான நிலையமாக விளங்கும் நாஜூ விமான நிலையத்தைத் திபெத் தன்னாட்சி பிரதேசம் கட்டியமைக்கத் துவக்குமென்று, இப்போது நடைபெற்று கொண்டிரு்ககும் திபெத் தன்னாட்சி பிரதேசத்தின் பணிக் கூட்டத்தில், தெரிவிக்கப்பட்டது. தன்னாட்சி பிரதேசத்தில் போக்குவரத்து வலைபின்னல் மேலும் முழுமையாக இருப்பதை இது காட்டுகின்றது.
நாஜூ விமான நிலையம் கடல் மட்டத்திலிருந்து 4 ஆயிரத்து 436 மீட்டர் உயரமான இடத்தில் கட்டப்படும். சுமார் 250 ஹெக்டர் பரப்பளவில் விமான நிலையத்தைக் கட்டவுள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.