சீனாவின் படை அதிகாரிகள் மற்றும் போர்வீரர்களின் சிந்தனை ஒழுக்க நெறியையும் அறிவியல் பண்பாட்டுக் குணத்தையும் உயர்த்த முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்று சீன அரசுத் தலைவர் ஹூ ச்சிந் தாவ் மார்ச் 12ஆம் நாள் சீனாவின் 11வது தேசிய மக்கள் பேரவையின் 5வது கூட்டத் தொடரின் விடுதலைப்படைவீரர் பிரதிநிதிக் குழுவின் முழு அமர்வில் கலந்து கொண்ட போது வலியுறுத்தினார்.
சீனாவின் படை, கடினமாக உழைக்கும் சிக்கனமாகப் படையை உருவாக்கும் தலைசிறந்த மரபுகளைப் பெரிதும் வெளிகொணடு, வீணடிப்பை எதிர்த்து, ஆடம்பரத்தைத் தடுத்து, பாதுகாப்பு மற்றும் படையின் ஆக்கப்பணிப் பயன்களை இடைவிடாமல் உயர்த்த வேண்டும் என்று ஹூ ச்சிந் தாவ் தெரிவித்தார்.