மார்ச் 14ஆம் நாள் காலை, சீனாவின் 11வது தேசிய மக்கள் பேரவையின் 5வது கூட்டத்தொடர், 12வது தேசிய மக்கள் பேரவைப் பிரதிநிதிகளின் எண்ணிக்கை மற்றும் தேர்தலைத் தீர்மானித்தது.
இத்தீர்மானத்தின் படி, 2013ஆம் ஆண்டு ஜனவரி திங்கள் சீனாவின் நகரங்களிலும் கிராமப்புறங்களிலும் முதன்முறையாக ஒரே விழுக்காட்டு முறையில் புதிய தேசிய மக்கள் பேரவைப் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்படுவர். புதிய பிரதிநிதிகளின் எண்ணிக்கை 3ஆயிரத்துக்குள் இருக்கும்.