• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
திபெதில் புத்த குருமார் தீக்குளிப்பு
  2012-03-14 14:21:00  cri எழுத்தின் அளவு:  A A A   

சீனாவின் திபெதில் புத்த குருமார் தீக்குளிப்பது குறித்துச் சீனத் தலைமை அமைச்சர் வென் சியாபாவ் கடும் வருத்தம் தெரிவித்தார். மார்ச் 14ஆம் நாள் காலை பெய்ஜிங்கில் நடைபெற்ற 11வது தேசிய மக்கள் பேரவை 5வது கூட்டத்தொடரின் செய்தியாளர் கூட்டத்தில் செய்தியாளரின் கேள்விக்குப் பதிலளிக்கையில் அவர் இதைக் கூறினார்.

அண்மையில் திபெதின பிரதேசத்தில், புத்த குருமார்கள் சிலர் தீக்குளித்தனர். இத்தகைய தீவிர செயல்கள் மூலம், சமூகத்தின் இணக்கத்தைச் சீர்குலைப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. திபெத்தைத் தாய் நாடான சீனாவிலிருந்து பிரிப்பது இச்செயலின் நோக்கமாகும். அதை சீன அரசு உறுதியாக எதிர்க்கிறது  என்று வென் ச்சியாபாவ் குறிப்பிட்டார்.

திபெத்தின் பொருளாதாரத்தை வளர்க்கும் போது, திபெத்தின் சுற்றுச்சூழலையும் பண்பாட்டுப் பாரம்பரியத்தையும் பாதுகாப்பதற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். திபெத் உடன்பிறப்புகளுக்கு மதிப்பு அளிக்கும் சமத்துவ அரசியல் கொள்கைகளை மேற்கொண்டு, அரசு தன் பணியை இடைவிடாமல் மேம்படுத்தும் என்றும் வென்ச் சியா பாவ் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040