சிரியா பிரச்சினையில் சீனாவுக்கு எந்த உள்நோக்கமும், தன்னல எண்ணமும் இல்லை. சிரிய அரசு உள்ளிட்ட எந்தத் தரப்புக்கும் சீனா ஒரு சார்பாக ஆதரவு காட்டவில்லை என்று சீனத் தலைமை அமைச்சர் வென் ச்சியாபாவ் மார்ச் 14ஆம் நாள் பெய்ஜிங்கில் தெரிவித்தார்.
இப்பிரச்சினையில் சீனாவுக்கு நான்கு அம்ச நிலைப்பாடு உண்டு. முதலாவது, அப்பாவி மக்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிப்பது. இரண்டாவது, சீர்த்திருத்தத்தைக் கோரித் தம் சொந்த உரிமைகளைப் பேணிக்காக்கும் சிரிய மக்களின் நியாயமான கோரிக்கைகளை மதிப்பது. மூன்றாவது, ஐ·நா மற்றும் அரபு நாடுகள் லீகின் சிறப்புத் தூதர்கள் சிரியா பிரச்சினையில் மேற்கொண்ட அரசியல் இணக்க முயற்சிகளுக்குச் சீனா ஆதரவு அளிப்பது. நான்காவது, தற்போது சிரிய மக்கள் முகங்கொடுக்கும் மனித நேய இன்னல்கள் குறித்து மனமிறங்கி சிரியாவுக்கு மனித நேய உதவிகளைச் சீனா அனுப்புவது. இவை நான்கும் சீனாவின் நிலைப்பாடாகும்.