சீனாவின் 11வது தேசிய மக்கள் பேரவையின் 5வது கூட்டத் தொடரின் செய்தியாளர் கூட்டம் 14ஆம் நாள் முற்பகல் பெய்ஜிங்கில் நடைபெற்றது. இவ்வாண்டு இன்னல்களும் நம்பிக்கையும் நிறைந்த ஆண்டாகும். அரசின் தெளிந்த சிந்தனை, துணிச்சல் மற்றும் நம்பிக்கை மக்களுக்குத் தேவை. மக்களின் நம்பிக்கை, ஆதரவு மற்றும் உதவி அரசுக்குத் தேவை என்று சீனத் தலைமை அமைச்சர் வென்ச்சியாபாவ் கூறினார். உள்நாடு மற்றும் வெளிநாட்டுச் செய்தியாளர்களிடம் பேசிய போது அவர் இதைத் தெரிவித்தார்.
சர்வதேச நிதி நெருக்கடி மற்றும் ஐரோப்பிய கடன் நெருக்கடி பரவலாகி தீவிரமடையும் நிலையில், சீனா தனது பணிகளைச் செவ்வனே மேற்கொள்வது முக்கிமானது என்றும் அவர் குறிப்பிட்டார்.