சீனாவின் பல்கலைக்கழகங்களில் திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தைச் சேர்ந்த மாணவர்கள் அனைவரும் வேலைவாய்ப்பு பெற துணை புரியும் பொருட்டு, திபெத் தன்னாட்சிப் பிரதேசம் அண்மையில் கொள்கைகளை வெளியிட்டது.
இவ்வாண்டு திபெத் 23 கோடி யுவானை ஒதுக்கீடு செய்து, அரசு ஊழியர் வேலைவாய்ப்புகளை அதிகரித்து, பல்கலைக்கழக பட்டதாரி மாணவர்களுக்கு ஏற்ற பொது நலன் வேலைவாய்ப்புகளை மேலதிகமாக உருவாக்கும். இதற்கிடையில், திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தின் பல்கலைக்கழக மாணவர்கள், திபெத்துக்கு அப்பாலுள்ள பிரதேசங்களுக்கு சென்று பணிபுரிவது அல்லது பயிற்சி பெறுவதைத் தூண்டும் என்று தெரிய வருகிறது.