• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஹுச் சிந் தாவின் பயணம்
  2012-03-19 19:16:29  cri எழுத்தின் அளவு:  A A A   
மார்ச் திங்கள் 26, 27ம் நாட்களில் தென் கொரியாவின் தலைநகரான சியோலில் நடைபெற இருக்கும் அணு பாதுகாப்பு உச்சிமாநாட்டிலும், மார்ச் திங்கள் 28,29ம் நாட்களி்ல் புது தில்லியில் நடைபெற இருக்கும் பிரிக்ஸ் நாடுகளின் தலைவர்களின் 4வது உச்சிமாநாட்டிலும் சீன அரசுத் தலைவர் ஹுச் சிந் தாவ் கலந்து கொள்வார். அதற்குப் பிறகு, மார்ச் திங்கள் 30ம் நாள் முதல், ஏப்ரல் திங்கள் 2ம் நாள் வரை அவர் கம்போடியாவில் பயணம் மேற்கொள்வார் என்று சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஹோங் லெய் 19ம் நாள் பெய்ஜிங்கில் அறிவித்தார்.

சியோல் அணு பாதுகாப்பு உச்சிமாநாட்டில், அணு பாதுகாப்பு குறித்த சீனாவின் அரசியல் கொள்கை, நிலைப்பாடு, முயற்சிகள், முக்கிய நடவடிக்கைகள் ஆகியவற்றை ஹுச் சிந் தாவ் முழுமையாக விளக்கிக் கூறுவார்.

பிரிக்ஸ் நாடுகளின் தலைவர்களின் 4வது உச்சிமாநாட்டில் கலந்து கொள்ளும் போது, பொருளாதாரம், நாணயம், வளர்ச்சி ஆகிய பிரச்சினைகளையும், பொது அக்கறை கொண்ட முக்கிய சர்வதேசப் பிரச்சினைகளையும், பிரிக்ஸ் நாடுகளின் ஒத்துழைப்பையும் பற்றி, பிரேசில், ரஷியா, இந்தியா, தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளின் தலைவர்களுடன், ஹுச் சிந் தாவ் கருத்துக்களைப் பரிமாறிக் கொள்வார்.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040