பிரிக்ஸ் நாடுகளின் தலைவர்களிடை 4வது பேச்சுவார்த்தை புது தில்லியில் நடைபெறவுள்ளது. உலகத்தின் மேலாண்மையும், தொடரவல்ல வளர்ச்சியும் இதில் விவாதிக்கப்படும் 2 முக்கிய தலைப்புகளாகும். அவை, சர்வதேச சமூகமும் பிரிக்ஸ் நாடுகளும் ஆர்வம் வாய்ந்த பிரச்சினைகளாகும். இதற்கு பிரிக்ஸ் நாடுகள் ஒத்த நிலைப்பாட்டைக் கொள்கின்றன. அவற்றுக்கிடையில் சீரான ஒத்துழைப்பு அடிப்படை உண்டு என்று சீன வெளியுறவு அமைச்சரின் உதவியாளர் மாச்சுவ் ஷு 20ம் நாள் பெய்ஜிங்கில் தெரிவித்தார்.
உலகப் பொருளாதாரத்தின் மேலாண்மை, உலக மேலாண்மையின் மையமாகும். உலகப் பொருளாதாரத்தின் நிதானமான மறுமலர்ச்சியையும் வலிமையான வளர்ச்சியையும் முன்னேற்ற வேண்டும். சர்வதேசப் பொருளாதார முறைமையைச் சீர்திருத்தம் செய்து வளரும் நாடுகளின் கருத்து வெளிப்பாட்டு உரிமையை அதிகரிக்க வேண்டும் என்று அவர் கருத்து தெரிவித்தார்.
பொருளாதார வளர்ச்சியையும் சமூக வளர்ச்சியையும் சமமாக முன்னேற்றுவது, சுற்றுச்சூழலைப் பாதுகாப்பது ஆகியவை தொடரவல்ல வளர்ச்சியின் முக்கிய கடமையாகும் என்று மா ச்சாவ் ஷு தெரிவித்தார்.