சீன அரசுத் தலைவர் ஹூ சிந்தாவின் இந்தியப் பயணம் குறித்து, வெளியுறவு அமைச்சகம், மார்ச் 20ஆம் நாள் பெய்ஜிங்கில் உள்நாடு மற்றும் வெளிநாட்டுச் செய்தி ஊடகங்களுக்கென செய்தியாளர் கூட்டத்தை நடத்தியது. பிரிக்ஸ் நாடுகள் உட்பட பல புதிதாக வளரும் சந்தைகள் மற்றும் நாடுகள் உயர்வேக வளர்ச்சி அடைந்து வருகின்றமை, நிதி நெருக்கடியை சமாளிப்பது, உலகப் பொருளாதார வளர்ச்சியைத் தூண்டுவது, சர்வதேச உறவை ஜனநாயகமயமாக்குவது ஆகியவற்றைத் தூண்டும் முக்கிய வலிமையாக மாறியுள்ளது. பிரிக்ஸ் நாடுகளின் ஒத்துழைப்புக்கு நல்ல எதிர்காலம் உண்டு என்று சீன வெளியுறவு அமைச்சரின் உதவியார் மா ச்சாவ் ஷீ தெரிவித்தார்.
பிரிக்ஸ் நாடுகள் மாறுபட்ட நாட்டு நிலைமை, பண்பாடு, நிலவியல் நிலைமை கொண்டாலும், பல முக்கியச் சர்வதேச மற்றும் பிரதேசப் பிரச்சினைகளில், இந்நாடுகள் ஒத்த கருத்துகளை கொண்டுள்ளன. பிரிக்ஸ் நாடுகளுக்கிடை பொது அம்சங்கள் மற்றும் நலன்கள் முக்கியமானதவை. இதுவே, இவ்வொத்துழைப்பின் அடிப்படையாகும் என்றும் மா ச்சாவ் ஷீ தெரிவித்தார்.