• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
புதிய ஒத்துழைப்பு வாய்ப்பு
  2012-03-27 20:53:55  cri எழுத்தின் அளவு:  A A A   
பிரிக்ஸ் நாடுகளின் உச்சிமாநாடு 28,29ம் நாட்களில் புதுதில்லியில் நடைபெறும். இது குறித்து, இந்தியாவுக்கான சீனத் தூதர் சாங் யேன் செவ்வாய்கிழமை சீன வானொலி செய்தியாளருக்குச் சிறப்புப் பேட்டியளித்தார். இவ்வுச்சிமாநாடு பொதுக் கருத்துக்களை விரிவாக்கி, ஒத்துழைப்பை ஆழமாக்கும் புதிய வாய்ப்பாக மாறி, உலகப் பொருளாதார வளர்ச்சிக்கு நம்பிக்கையையும் பங்கையும் ஆற்ற வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.
அமைதி, பாதுகாப்பு மற்றும் செழுமை படைத்த பிரிக்ஸ் நாடுகளின் கூட்டாளியுறவு பற்றி சீனா, பிரேசில், ரஷியா, இந்தியா, தென்னாப்பிரிக்கா ஆகிய 5 நாடுகள் விவாதிக்கும் என்று சாங் யேன் தெரிவித்தார்.
பிரிக்ஸ் நாடுகள் என்ற கட்டுக்கோப்புக்குள் சீனாவும் இந்தியாவும் பயன் மிக்க ஒத்துழைப்பு மேற்கொண்டுள்ளதாக அவர் கூறினார். புதுதில்லியில், சீன அரசுத் தலைவர் ஹு சிந்தாவும், இந்திய தலைமை அமைச்சர் மன்மோகன் சிங்கும் இரு தரப்புப் பேச்சுவார்த்தை நடத்தி, இரு நாட்டு நெடுநோக்குக் கூட்டாளியுறவை மேலும் அதிகரிப்பது பற்றி கருத்துக்களைப் பரிமாறி கொள்வர்.
தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040