அணுப் பாதுகாப்பு பற்றிய உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட பின், புதுதில்லியில் நடைபெறவுள்ள பிரிக்ஸ் நாடுகளின் தலைவர்களிடை 4வது பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ள, சீன அரசுத் தலைவர் ஹு ச்சிந்தாவ் 28ம் நாள் காலை சிறப்பு விமானம் மூலம் தென்கொரியாவின் சியோல் மாநகரிலிருந்து புறப்பட்டு புதுதில்லிக்குச் சென்றார்.
அணு உச்சி மாநாட்டில் உரை நிகழ்த்திய ஹு ச்சிந்தாவ், புதிய நிலையில் அணுப் பாதுகாப்பை வலுப்படுத்தும் நான்கு முன்மொழிவுகளை வழங்கியதோடு, அணுப் பாதுகாப்புக்காக சீனா மேற்கொண்ட முயற்சிகள் மற்றும் எதிர்காலத்தில் மேற்கொள்ள இருக்கும் நடவடிக்கைகள் ஆகியவற்றையும் விவரித்தார்.