• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
பிரிக்ஸ் நாடுகளிடை ஒருங்கிணைப்பும் ஒத்துழைப்பும்
  2012-03-28 11:58:21  cri எழுத்தின் அளவு:  A A A   
புதுதில்லியில் நடைபெறவுள்ள பிரிக்ஸ் நாடுகளின் தலைவர்களிடையிலான 4வது பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ளும் முன்பு, சீன அரசுத் தலைவர் ஹு ச்சிந்தாவ், பிரேசில் வணிக நாளேடு, ரஷிய செய்தித்தாள், தி ஹிந்து, சீனாவின் மக்கள் நாளேடு, தென்னாப்பிரிகாவின் வணிக நாளேடு ஆகிய செய்தி ஊடகங்களுக்குக் கூட்டாகப் பேட்டி அளித்தார். இப்பேச்சுவார்த்தை ஆக்கமுள்ள சாதனைகளைப் படைக்க சீனா பிற உறுப்பு நாடுகளுடன் இணைந்து முயற்சி மேற்கொள்ளும் என்று அவர் தெரிவித்தார்.

பிரிக்ஸ் நாடுகளிடையிலான ஒத்துழைப்பு எழுச்சி இப்பேச்சுவார்த்தையின் போது தொடர்ந்து வெளிப்படுத்தப்படும். பொது அக்கறை வாய்ந்த சர்வதேசப் பொருளாதாரப் பிரச்சினை மற்றும் இதர முக்கிய பிரச்சினைகள் பற்றி அது ஒருங்கிணைப்பையும், ஒத்துழைப்பையும் வலுப்படுத்தி, உலகப் பொருளாதாரத்தின் நிதானம் மற்றும் மீட்சிக்குக் கூட்டாக நம்பிக்கையைத் தந்து, உலகக் கூட்டு வளர்ச்சியை மேம்படுத்துவதற்குப் பங்காற்ற வேண்டும் என்று சீனா எதிர்பார்ப்பதாக ஹு ச்சிந்தாவ் தெரிவித்தார்.

சீனாவின் வெளியுறவுக் கொள்கை, பிரிக்ஸ் நாடுகள் உட்பட புதிதாக வளரும் சந்தைகளைக் கொண்ட நாடுகள் மற்றும் வளரும் நாடுகளுடன் ஒத்துழைப்பை முக்கியமாகக் கொண்டு, பிரிக்ஸ் நாடுகளுடன் ஒத்துழைப்புக்கு ஆதரவு அளித்து, அதில் ஊக்கத்துடன் கலந்து கொள்கிறது என்று ஹூ ச்சிந்தாவ் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040