• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனாவின் திபெத் அடிமைகள் விடுதலை பெற்ற 53வது ஆண்டு நிறைவு
  2012-03-28 17:14:41  cri எழுத்தின் அளவு:  A A A   

சீனாவின் திபெத் அடிமைகள் விடுதலை பெற்ற 53வது ஆண்டு நிறைவு நாளை, பனி மூடிய பீடபூமி மார்ச் 28ஆம் நாள் முற்பகல் வரவேற்றது. 53 ஆண்டுகளுக்கு முன் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் திபெத் மக்கள், ஜனநாயக சீர்திருத்த இயக்கத்தை மேற்கொண்டு, திபெத் நிலப்பிரபுத்துவ பண்ணை அடிமை அமைப்பு முறையை முற்றிலும் ஒழித்ததை முன்னிட்டு, திபெத்திலுள்ள பல்வேறு தேசிய இன மக்கள் பல்வகை நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

துறவிகளுக்கான மருத்துவச் சிகி்ச்சை மற்றும் சமூகத்தின் முதுமைக் கால காப்புறுதியின் அடிப்படை பரவல், வேளாண் மற்றும் மேய்ச்சல் பிரதேசத்தில் தனிநபர் மருத்துவ நிதியுதவி அதிகரிப்பு, புதிய கிராமக் கட்டுமானத்தை விரைவுபடுத்துவது ஆகியவை திபெத்தில் நடைபெற்று வருகின்றன.

ஜனநாயகச் சீர்திருத்தம் நடைமுறைக்கு வந்த 53 ஆண்டுகளாக, திபெத்தின் பொருளாதாச் சமூக வளர்ச்சியும், மக்களின் வாழ்க்கையும், குறிப்பிடத்தக்க சாதனைகளைப் பெற்றுள்ளன. 2011ஆம் ஆண்டு திபெத் மொத்த உற்பத்தி மதிப்பு, 6058கோடியே 30இலட்சம் யுவானை எட்டியது என்று திபெத் தன்னாட்சி பிரதேசத்தின் தலைவர் பேமாச்சுலின் அறிமுகப்படுத்தினார்.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040