சீனாவின் திபெத் அடிமைகள் விடுதலை பெற்ற 53வது ஆண்டு நிறைவு கலந்துரையாடல் கூட்டம் 28ம் நாள் பிற்பகல் லாசா நகரில் நடைபெற்றது. திபெத் மாணவர்கள், விடுதலை பெற்ற அடிமைகள், மூத்த ஊழியர்கள், மதத்துறையினர் ஆகியோரின் பிரதிநிதிகள் இக்கூட்டத்தில் உரை நிகழ்த்தினர். கடந்த 53 ஆண்டுகளில், திபெத்தின் பொருளாதாரம் மற்றும் சமூக லட்சியம் வளர்ச்சியடைந்துள்ளது. வளர்ச்சி பயன்கள் மக்களுக்கு நன்மை புரிக்கின்றன என்று விடுதலை பெற்ற அடிமைகளின் பிரதிநிதியாக கலந்து கொண்ட சி ரென் டி ஜி உரையில் தெரிவித்தார்.
திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தின் தலைவர் பர்மா ச்சிலினும் இதில் உரை நிகழ்த்தினார். திபெத்தில் மேற்கொள்ளப்பட்ட ஜனநாயகச் சீர்திருத்தத்தின் முக்கியத்துவத்தை அவர் வெகுவாகப் பாராட்டினார். கடந்த 53 ஆண்டுகளில் திபெத் பெற்றுள்ள பல்வகை சாதனைகளை அவர் தொகுத்து, கம்யூனிஸ்ட் கட்சி இல்லாவிட்டால் புதிய சோஷலிச திபெத் உருவாகபட்டிருக்காது, திபெதிலுள்ள பல்வேறு தேசிய இன மக்களுக்கு இன்பமான வாழ்க்கை கிடைத்திருக்காது என்று கூறினார்.