பிரிக்ஸ் நாடுகளின் தலைவர்களிடை 4வது உச்சுமாநாடு 29ம் நாள் புதுதில்லியில் நிறைவடைந்தது. சீன வெளியுறவு அமைச்சரின் உதவியாளர் மா சோ சூ உள்ளிட்ட சீனப் பிரதிநிதிக் குழுவின் உறுப்பினர்கள் செய்தி மையத்தில் செய்தியாளர் கூட்டத்தை நடத்தினர்.
ஒன்றுக்கு ஒன்று நலன் தரும் ஒத்துழைப்பை மேற்கொண்டு ஒளிமயமான எதிர்காலத்தைத் துவக்கி வைப்போம் என்ற தலைப்பில் சீன அரசுத் தலைவர் ஹு சிந்தாவ் மாநாட்டில் உரை நிகழ்த்தினார். அத்துடன் அமைதிப் வளர்ச்சி பாதையில் சீனா ஊன்றி நிற்பதையும் அவர் விளக்கிக் கூறினார். தலைவர் ஹு சிந்தாவின் உரை இதர பிரிக்ஸ் நாட்டுத் தலைவர்களின் பாராட்டைப் பெற்றுள்ளது என்று மா சோ சூ கூறினார்.
உலகில் பல்வகை பிரதேச மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு அமைப்புகளில் பிரிக்ஸ் நாடுகளின் உச்சிமாநாடு ஒன்றாகும். சர்வதேச நிலைமையின் மாற்றத்திற்கேற்ப நாடுகளின் ஒத்துழைப்பு துறைகள் மென்மேலும் விரிவாகும் என்றும் மா சோ சூ கருத்து தெரிவித்தார்.