• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
பிரிக்ஸ் நாடுகளின் தலைவர்களது 4வது உச்சி மாநாடு புதுதில்லியில் நிறைவடைந்தது
  2012-03-29 19:51:41  cri எழுத்தின் அளவு:  A A A   
தற்போதைய உலக பொருளாதாரத்தில் வளர்ச்சி ஆற்றலுடைய பிரிக்ஸ் என்றழைக்கப்படும் பிரேசில் ரஷியா இந்தியா சீனா தென்னாப்பிரிக்கா ஆகிய 5 நாடுகளின் தலைவர்கள், 29ம் நாள் இந்திய தலைநகர் புதுதில்லியில் 4வது உச்சி மாநாட்டை நடத்தினர். நாணயம் பொருளாதாரம் வர்த்தகம் ஆகிய துறைகளில் நடைமுறையாகும் ஒத்துழைப்பு குறித்து பொதுக் கருத்து எட்டப்பட்டுள்ளது. பிரிக்ஸ் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்தி, நீண்டகாலத்தில் அமைதியான செழுமையான உலகத்தை முன்னேற்ற, பாடுபட சீனா விரும்புகிறது என்று சீன அரசுத் தலைவர் ஹூச்சின்தாவ் தெரிவித்தார். உள்ளூர் நேரப்படி 29ம் நாள் நண்பகல் ஒரு மணியளவில், பிரிக்ஸ் நாடுகளின் தலைவர்களது 4வது உச்சி மாநாடு புதுதில்லியிலுள்ள தாஜ் நட்சத்திர விடுதியில் முடிவடைந்தது. 5 நாட்டு தலைவர்கள் வீற்றிருக்க, பிரிக்ஸ் நாடுகளின் வங்கிகளுக்கிடை ஒத்துழைப்பு அமைப்பு முறையை உருவாக்கும் பொது உடன்படிக்கையில் பிரிக்ஸ் நாடுகளின் அலுவலர்கள் கையொப்பமிட்டனர்.
தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040