பிரிக்ஸ் நாடுகள் தலைவர்களது 4வது உச்சி மாநாடு 29ம் நாள் இந்திய தலைநகர் புதுதில்லியில் நடைபெற்றது. சீன அரசுத் தலைவர் ஹூச்சின்தாவ், பிரிக்ஸ் நாடுகள் ஒத்துழைப்பு குறித்து 4 ஆலோசனைகளை முன்வைத்தார். பிரிக்ஸ் நாடுகளின் ஒத்துழைப்புக்கு சீனா எப்போதும் ஆதரவு அளிக்கும். வளரும் நாடுகளுடன் சிக்கல்களையும் பிரச்சினைகளையும் சுமூகமாக தீர்க்கும் என்று ஹூச்சின்தாவ் தெரிவித்தார்.
கூட்டாக வளர்ச்சியடைவதில் ஊன்றி நின்று கூட்டுச் செழுமையை முன்னேற்றுவது, சமநிலை அடிப்படையில் கலந்தாய்வு மேற்கொண்டு ஒன்றுக்கு ஒன்று அரசியல் நம்பிக்கையை ஆழமாக்குவது, பயன்தரும் முறையில் ஒத்துழைப்த்து ஒத்துழைப்பின் அடிப்படையை வலுப்படுத்துவது, சர்வதேச ஒத்துழைப்பின் மூலம், உலக வளர்ச்சியை முன்னேற்றுவது ஆகிய 4 ஆலோசனைகளை ஹூச்சின்தாவ் தெரிவித்தார்.