• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
போ ஆவ் ஆசிய மன்றக் கூட்டத்தில் பாகிஸ்தானின் விருப்பம்
  2012-04-01 19:48:17  cri எழுத்தின் அளவு:  A A A   
பாகிஸ்தான் தலைமையமைச்சர் ஹெச்.ஈ. சயத் மக்தூம் யூசுஃப் ரசா கிலானி ஏப்ரல் முதல் நாள் சீனாவின் ஹாய்நன் மாநிலத்தின் போ ஆவ் நகரில் கூறுகையில், போ ஆவ் ஆசிய மன்றத்தின் ஆண்டுக்கூட்டம் என்ற வாய்ப்பைப் பயன்படுத்தி, ஒன்றுக்கு ஒன்று பரிமாறிக் கொள்வதன் மூலமாக, ஆசிய நாடுகள் ஒத்துழைப்பை ஆழமாக்க வேண்டுமென விரும்புவதாக தெரிவித்தார்.

ஆசியாவின் பல்வேறு நாடுகளுக்கிடையே எரியாற்றல், பண்பாடு, அறிவியல் தொழில்நட்பம், கல்வி முதலிய துறைகளில் பன்முகங்களிலும் ஒத்துழைப்பை ஆழமாக்க வேண்டும். இதனால் இன்னல்களைச் சமாளித்து, சீரான தொடரவல்ல வளர்ச்சிப் பாதையில் வளர முடியும் என்று நம்புவதாக கிலானி கூறினார்.

போ ஆவ் ஆசிய மன்றத்தின் ஆண்டுக்கூட்டத்தில் பாகிஸ்தான் பெரும் கவனம் செலுத்தி வருகிறது. இக்கூட்டத்தில் கலந்து கொள்வதன் மூலம், வளர்ச்சிக்கான உத்திகளை ஆசிய நாடுகளின் தலைவர்கள் இணைந்து திட்டமிட வேண்டுமென்று அவர் விருப்பம் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040