ஏப்ரல் திங்கள் 2ம் நாள் அமெரிக்காவின் முன்னாள் நிதியமைச்சர் பால்சன் போ ஆவ்வில் சீன வானொலியின் செய்தியாளருக்குப் பேட்டியளித்த போது பேசுகையில், தற்போது உலகப் பொருளாதாரப் போக்கு, நன்றாக இல்லை. இந்நிலைமையை மாற்றுவதற்கு, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், சீனா முதலிய தரப்புகளின் கூட்டு முயற்சி தேவைப்படும் என்று குறிப்பிட்டார்.
வளர்ந்த நாடுகளானாலும் வளரும் நாடுகளானாலும் அவை, சீர்திருத்தம் மற்றும் தொடரவல்ல வளர்ச்சிப் பாதையை உறுதிப்படுத்த வேண்டும். இதனால், தற்போதைய பொருளாதார நிலைமையை மாற்ற முடியும். உலகளவில் சீனப்பொருளாதாரத்தின் செல்வாக்கு ஆற்றல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஆனால், அதன் நிதிக்கொள்கைகளில் மேற்கொள்ளப்பட்ட கட்டுப்பாட்டு வாய்ப்பு மேன்மேலும் குறைவாக இருக்கிறது. இது, அடுத்த 10 ஆண்டுகளில் சீனா சமாளிக்க வேண்டியிருக்கும் அறைகூவலாக மாறும் என்று பால்சன் கருத்து தெரிவித்தார்.