• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
திபெத்தின் வறுமை ஒழிப்பு திட்டப்பணி
  2012-04-26 12:00:09  cri எழுத்தின் அளவு:  A A A   

12வது ஐந்தாண்டுத் திட்டக் காலத்தில் புதிதாக வகுக்கப்பட்ட வறுமை ஒழிப்பு மற்றும் வளர்ச்சித் திட்டத்துக்கு இணங்க, 2013ஆம் ஆண்டுக்குள் அனைத்து விவசாயிகள் மற்றும் ஆயர்களின் வீட்டு வசதிக் கட்டுமானத்தைத் திபெத் செய்து முடிக்கும் என்று திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தின் வறுமை ஒழிப்பு அலுவலகம் அண்மையில் தெரிவித்தது.

2011 முதல் 2013ஆம் ஆண்டு வரை, வறுமை ஒழிப்புப் பணிக்கான சிறப்பு நிதி 55 கோடி யுவானை அந்த அலுவலகம் ஒதுக்கீடு செய்து, 22 ஆயிரம் குடும்பங்களைச் சேர்ந்த வறிய விவசாயிகள் மற்றும் மேய்ப்பர்களுக்கு உதவி செய்து வீடுகளைக் கட்டியமைக்கும்.

2005 முதல் 2010ஆம் ஆண்டு வரை, விவசாயிகள் மற்றும் மேய்ப்பர்களின் வீட்டு வசதித் திட்டப்பணியை முக்கியமாகக் கொண்ட சோஷலிசப் புதிய கிராமப்புறத்தின் கட்டுமானத்தைத் திபெத் மேற்கொண்டுள்ளது. அது முதல், வறியக் குடும்பங்களின் குடியிருப்பு நிலை குறிப்பிடத்தக்க அளவில் சீரடைந்து வருகின்றது.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040