2வது சீன-ஆசிய-ஐரோப்பிய பொருட்காட்சியின் அறிமுகக் கூட்டம் ஜூன் 13ஆம் நாள் பிற்பகல் பாகிஸ்தானின் ரவல்பிண்டி நகரில் நடைபெற்றது. சின்சியாங் உய்கூர் தன்னாட்சிப் பிரதேசத்தின் தலைநகரான உரும்சியில் நடைபெறும் இந்த மாபெரும் வணிகப் பொருட்காட்சியில் கலந்துகொள்ள, பாகிஸ்தானின் தொழில் மற்றும் வர்த்தகத் துறைகளின் பிரமுகர்களுக்குச் அந்தத் தன்னாட்சிப் பிரதேச அரசின் துணை தலைமைச் செயலாளர் செஞ்சிங் அழைப்பு விடுத்துள்ளார்.
இவ்வாண்டின் செப்டம்பர் முதல் நாள், 2வது சீன-ஆசிய-ஐரோப்பிய பொருட்காட்சி உரும்சியில் நடைபெறும். இணக்கமான வளர்ச்சி, ஒத்துழைப்பில் கூட்டு வெற்றி என்பது நடப்புப் பொருட்காட்சியின் தலைப்பாகும். சீனா, ஆசிய மற்றும் ஐரோப்பிய நாடுகளின் சிறந்த உற்பத்திப் பொருட்கள் காட்சிக்கு வைக்கப்படுவதோடு, இப்பொருட்காட்சியில் கலந்துகொள்ளும் நாடுகளின் முதலீட்டுக் கொள்கைகளும் சுற்றுலாச் சூழல்களும் அறிமுகப்படுத்தப்படும்.