இந்தியத் தொழிற்துறை மற்றும் வணிகத் துறை சம்மேளனத்தின் உயர் நிலை அலுவலர் மாஸ் சி நாதானி, இச்சம்மேளனத்தைச் சேர்ந்த உறுப்பு அமைப்புகளின் பொறுப்பாளர்களுடன் இந்நடவடிக்கையி்ல் கலந்து கொண்டார். இந்நடவடிக்கையை வாய்ப்பாகக் கொண்டு, இந்திய-சீன வர்த்தகப் பொருளாதார ஒத்துழைப்பை ஆழமாக்க வேண்டும் என்று அவர் விருப்பம் தெரிவித்தார்.
அவர் மேலும் பேசுகையில், பட்டுப் பாதை நெடுகிலும் இருக்கும் நாடுகளுக்கு மீண்டும் வர்த்தகப் பொருளாதார ஒத்துழைப்பு வாய்ப்புகளை, நடப்பு பொருட்காட்சி கொண்டு வரும் என்று நம்புகிறேன். இப்பொருட்காட்சியில் இந்தியா கலந்து கொள்வது, சீனாவின் தொழில் நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்வதைத் தூண்டி, இந்தியாவின் ஏற்றுமதியை முன்னேற்றுவதற்குத் துணை புரியும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
இரண்டாவது சீன-ஆசிய-ஐரோப்பியப் பொருட்காட்சி, செப்டம்பர் முதல் நாள் முதல், 5ம் நாள் வரை சின்ஜியாங்கின் உரும்சி நகரில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.