• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீன-ஆசிய-ஐரோப்பியப் பொருட்காட்சி
  2012-06-19 11:16:50  cri எழுத்தின் அளவு:  A A A   
சீனாவின் சின்ஜியாங் உய்கூர் தன்னாட்சிப் பிரதேசத்தின் அரசு வர்த்தக மற்றும் பொருளாதாரப் பிரதிநிதிக் குழு, 18ம் நாள் புது தில்லியில் சிறப்பு நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டது. அதன் மூலமாகச், சின்ஜியாங் உய்கூர் தன்னாட்சிப் பிரதேசத்தில் நடைபெற இருக்கும் 2வது சீன-ஆசிய-ஐரோப்பியப் பொருட்காட்சியை, இந்தியாவின் தொழில் மற்றும் வணிக துறையினர்களுக்கு அது அறிமுகப்படுத்தியது.

இந்தியத் தொழிற்துறை மற்றும் வணிகத் துறை சம்மேளனத்தின் உயர் நிலை அலுவலர் மாஸ் சி நாதானி, இச்சம்மேளனத்தைச் சேர்ந்த உறுப்பு அமைப்புகளின் பொறுப்பாளர்களுடன் இந்நடவடிக்கையி்ல் கலந்து கொண்டார். இந்நடவடிக்கையை வாய்ப்பாகக் கொண்டு, இந்திய-சீன வர்த்தகப் பொருளாதார ஒத்துழைப்பை ஆழமாக்க வேண்டும் என்று அவர் விருப்பம் தெரிவித்தார்.

அவர் மேலும் பேசுகையில், பட்டுப் பாதை நெடுகிலும் இருக்கும் நாடுகளுக்கு மீண்டும் வர்த்தகப் பொருளாதார ஒத்துழைப்பு வாய்ப்புகளை, நடப்பு பொருட்காட்சி கொண்டு வரும் என்று நம்புகிறேன். இப்பொருட்காட்சியில் இந்தியா கலந்து கொள்வது, சீனாவின் தொழில் நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்வதைத் தூண்டி, இந்தியாவின் ஏற்றுமதியை முன்னேற்றுவதற்குத் துணை புரியும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

இரண்டாவது சீன-ஆசிய-ஐரோப்பியப் பொருட்காட்சி, செப்டம்பர் முதல் நாள் முதல், 5ம் நாள் வரை சின்ஜியாங்கின் உரும்சி நகரில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040