2வது சீன-ஆசிய-ஐரோப்பியப் பொருட்காட்சி இரண்டு வாரங்களுக்குப் பின் சின் ச்சியாங் உய்கூர் தன்னாட்சிப் பிரதேசத்தின் தலைநகர் உருமுச்சியில் நடைபெறவுள்ளது. இதில் கலந்து கொள்ள 55 நாடுகளும் பிரதேசங்களும் 5 சர்வதேச அமைப்புகளும் விண்ணப்பம் செய்துள்ளன.
அவற்றில் இந்தியா முதல் முறையாக கலந்து கொள்ளும் என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
2011ம் ஆண்டு முதலாவது பொருட்காட்சியும் உருமுச்சியில் தான் நடைபெற்றது. வெளிநாடுகளுடன் எட்டிய வர்த்தக உடன்படிக்கைகளின் மதிப்பு 550 கோடி அமெரிக்க டாலரைத் தாண்டியது. உள்நாட்டு வர்த்தக உடன்படிக்கைகளின் மதிப்பு 79 ஆயிரத்து 300 கோடி யுவானாகும். சீனாவுக்கும் ஆசிய-ஐரோப்பாவுக்குமிடையில் பன்முக வர்த்தக ஒத்துழைப்புக்கான மேடையாக இப்பொருட்காட்சி மாறியுள்ளது.