2011 முதல் 2015ஆம் ஆண்டு வரை, கிராமப்புற குடிநீர் பாதுகாப்புத் திட்டப்பணி, சீனாவின் சோஷலிச புதிய கிராமப்புறக் கட்டுமானத்தின் முக்கிய பணியாகக் கொள்ளப்படுகிறது. 29 கோடியே 80 இலட்சம் கிராமவாசிகள், ஒரு இலட்சத்து 14 ஆயிரம் கிராமப் பள்ளிகளின் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் குடிநீர் பாதுகாப்புப் பிரச்சினையை இத்திட்டப்பணி தீர்க்கும். 29ஆம் நாள் பெய்ஜிங்கில் நடைபெற்ற 7வது சீன நீர்வள உச்சிமாநாட்டில் தொடர்புடைய அலுவர் இதைத் தெரிவித்தார்.
2002ஆம் ஆண்டு முதல், சீன அரசு, கிராமப்புற குடிநீர் திட்டப்பணியில் மொத்தமாக 17860 கோடி யுவானை ஒதுக்கீடு செய்துள்ளது. 32 கோடியே 60 இலட்சம் கிராமவாசிகளின் குடிநீர் பிரச்சினை தீர்க்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.