சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 18வது தேசிய மாநாடு, 8ஆம் நாள் காலை 9 மணியளவில் பெய்ஜிங் மக்கள் மாமண்டபத்தில் துவங்கும் என்று இம்மாநாட்டின் செய்தித் தொடர்பாளர் சாய் மிங்ட்சௌ 7ஆம் நாள் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அறிவித்தார்.
அவர் இது பற்றி கூறுகையில், சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 18வது தேசிய மாநாட்டின் ஆயத்தக் கூட்டம் 7ஆம் நாள் பிற்பகல் நடைபெற்றது. சி ஜின்பிங், அம்மாநாட்டின் தலைமைச் செயலாளராகப் பதவி ஏற்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது என்று தெரிவித்தார். சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 18வது தேசிய மாநாட்டின் செய்தி மையம், 7ஆம் நாள் பிற்பகல் 4:30 மணிக்கு பெய்ஜிங் மக்கள் மாமண்டபத்தில் செய்தியாளர் கூட்டத்தை நடத்தியது. சீன மற்றும் வெளிநாட்டுச் செய்தியாளர்கள் சுமார் 600 பேர் அதில் கலந்து கொண்டனர்.