சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 18வது தேசிய மாநாடு நடைபெற்று வரும்போது, வெளிநாடுகளின் அரசியல்வாதிகள், கட்சிகள் மற்றும் அமைப்புகள் கடந்த சில நாட்களாக அடுத்தடுத்து வாழ்த்துக் கடிதங்களை அனுப்பியுள்ளன.
உலகில் மிக அதிக மக்கள் தொகை கொண்ட இரு நாடுகளாகவும் அண்டை நாடுகளாகவும் திகழும் இந்தியாவும் சீனாவும், நட்புறவை வளர்ப்பது, உலகின் அமைதி மற்றும் நிதானத்துக்கு முக்கிய பங்காற்ற முடியும். இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் வெளியுறவுத் துறைத் தலைவர் கரண் சிங் வாழ்த்துக் கடிதத்தில் இவ்வாறு கூறினார்.
இந்திய-சீன உறவு தொடர்ந்து வளரும் என்றும், இரு நாடுகளிடையே எந்த பிரச்சினைகளும் நட்பார்ந்த மற்றும் அமைதியான முறையில் தீர்க்கப்பட முடியும் என்றும் அவர் விருப்பம் தெரிவித்தார்.