சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் பொதுச் செயலாளர் ஹூச்சிந்தாவ் கட்சியின் 18வது தேசிய மாநாட்டில் வழங்கிய அறிக்கை பற்றி, The Nation எனும் பாகிஸ்தான் செய்தியேட்டின் சிறப்பு விமர்சகர் எஸ்.எம்.ஹாலி பெய்சிங்கில் சீன வானொலி நிலையத்தின் செய்தியாளரிடம் கருத்துத் தெரிவித்தார். சீனத் தனிச்சிறப்பு வாய்ந்த சோஷலிச அரசியல் வளர்ச்சிப் பாதையில் உறுதியாக முன்னேறி, அரசியல் அமைப்பு முறை சீர்திருத்ததை ஆழமாக்க வேண்டும் என்று இவ்வறிக்கையில் ஹூச்சிந்தாவ் வலியுறுத்தினார். சீனாவின் நிலைமைக்கேற்ப வகுத்த வளர்ச்சி நெடுநோக்குத் திட்டம் இதுவாகும் என்றும், இது நடைமுறைக்குப் பொருந்திய முக்கியத்துவம் வாய்ந்தது என்றும் அவர் தெரிவித்தார்.
அறிக்கையில் பொதுச் செயலாளர் ஹூச்சிந்தாவ் முன்வைத்த, அரசியல் அமைப்பு முறைச் சீர்திருத்தம், குறிப்பாக உட்கட்சியின் அமைப்பு முறையின் மேம்பாட்டை விரைவுபடுத்தி, ஜனநாயக அமைப்பு முறையை மேலும் மேம்படுத்தி, செழிப்பாக்க வேண்டும் என்பது, சீனாவின் நடைமுறை நிலைமைக்கு மிகவும் பொருந்தியது என்று எஸ். எம். ஹாலி தெரிவித்தார்.
மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பு, நகர் மற்றும் கிராமப்புற குடிமக்களின் நபர்வாரி வருமானம் ஆகியவை பற்றிய குறிப்பிட்ட இலக்குகள் அறிக்கையில் முதன்முறையாக முன்வைக்கப்பட்டன. சமூகக் கட்டுமானம், பொது மக்களின் இன்பத்துடன் நெருக்கமாக தொடர்பு கொண்டுள்ளது என்றும், பொருளாதாரத்தை வளர்க்கும் அடிப்படையில், பொது மக்களின் மேம்பாட்டை உத்தரவாதம் செய்து, மேம்படுத்தி, அறிவியல் அடிப்படை வளர்ச்சிக் கண்ணோட்டததைச் செயல்படுத்த வேண்டும் என்றும் எஸ். எம்.ஹாலி கருத்துத் தெரிவித்தார்.