நவம்பர் 8ஆம் நாள், தேபியன் மின்சார கருவி பங்கு முதலீட்டு நிறுவனத்தின் தலைமை இயக்குநரான சாங்சின், இம்மாநாட்டின் பிரதிநிதி என்ற முறையில், ஹுச்சிந்தாவ் வழங்கிய அறிக்கையைக் கேட்டறிந்தார். அவர் பேசுகையில், தொழில் நிறுவனத்தின் வளர்ச்சி, அறிவியல் தொழில் நுட்பப் புத்தாக்கத்தைச் சார்ந்திருக்கிறது என்று கருத்து தெரிவித்தார்.
கடந்த சில ஆண்டுகளில் பொருளாதாரக் கட்டமைப்புக்கான நெடுநோக்குச் சரிப்படுத்தலை சீனா வலுப்படுத்தி வருகிறது. சில ஆண்டுக்கால ஆய்வுகளின் மூலம், பொருளாதார அதிகரிப்பு முறையை மாற்றுவதில் சீனா பெரும் முன்னேற்றம் அடைந்துள்ளது என்று இம்மாநாட்டின் பிரதிநிதியும், சீனத் தேசிய வளர்ச்சி மற்றும் சீர்திருத்த ஆணையத்தின் தலைவருமான சாங்பிங் குறிப்பிட்டார். தேவைக் கட்டமைப்பை எடுத்துக்காட்டாகக் கொண்டு அவர் கூறியதாவது—
"முன்பு ஏற்றுமதி மற்றும் முதலீட்டைச் சார்ந்து பொருளாதார வளர்ச்சியைத் தூண்டினோம். ஆனால் தற்போது சீனாவின் தேவைக் கட்டமைப்பில் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. எனவே, உள்நாட்டுத் தேவை விரிவாக்கத்தை முக்கியமாகச் சார்ந்து பொருளாதார அதிகரிப்பைத் தூண்டுகின்றோம்" என்று அவர் கூறினார்.
மேலும், சீன அரசவையின் வளர்ச்சி ஆய்வு மையத்தின் ஒட்டுமொத்தப் பொருளாதாரத் துறை தலைவர் யூபின் பேசுகையில், பொருளாதாரத்தின் தொடரவல்ல வளர்ச்சியை நிலைநிறுத்த வேண்டுமானால், பொருளாதார அமைப்பு முறைச் சீர்திருத்தத்தை பன்முகங்களிலும் ஆழமாக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்தார்.
பொருளாதாரத்தின் வளர்ச்சி முறை மாற்றத்தை நிறைவேற்றி, பன்முக, ஒருங்கிணைந்த மற்றும் தொடரவல்ல வளர்ச்சியை சீனா உண்மையில் நனவாக்க வேண்டுமானால், அது சீனத் தொழில் நிறுவனங்களின் முயற்சி மற்றும் ஆய்வைச் சார்ந்திருக்க வேண்டும். இது குறித்து சாங்சின் கூறியதாவது—
"அறிவியல் தொழில் நுட்பப் புத்தாக்கத்திலும் முன்னேறிய தொழில் நுட்பத்தின் அடிப்படை ஆய்வுத் துறையிலும் மேலும் பெரும் முதலீடு செய்ய வேண்டும். இவ்வாறு செய்தால், புத்தாக்கத் தொழில் நிறுவனத்தின் கட்டுமானத்தையும், அதன் தொடரவல்ல, சீரான மற்றும் விரைவான வளர்ச்சியையும் நனவாக்க முடியும்" என்று அவர் கூறினார்.