சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 18வது தேசிய மாநாட்டுச் செய்தி மையம், 4வது செய்தியாளர் கூட்டத்தை 12ஆம் நாள் பிற்பகல் பெய்ஜிங்கில் நடத்தியது. உறைவிட மற்றும் நகர-கிராம வளர்ச்சி அமைச்சகம், தேசிய வளர்ச்சி மற்றும் சீர்திருத்த ஆணையம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைச்சகம், மனித வளம் மற்றும் சமூகக் காப்புறுதி அமைச்சகம் ஆகியவற்றின் பொறுப்பாளர்கள், சீன மக்களின் வாழ்க்கையில் மேற்கொள்ளப்படும் பணிகள் குறித்து சீன மற்றும் வெளிநாட்டு செய்தியாளர்களிடம் எடுத்துக்கூறினர்.
சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 16வது தேசிய மாநாடு முதல், சுற்றுச்சூழல் பாதுகாப்பில், குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களைச் சீனா பெற்றுள்ளது என்று அதன் அமைச்சர் டசெள ஷெங் சியன் தெரிவித்தார்.
இயற்கையான சுற்றுச்சூழல் மிகுந்த பண்பாட்டுக் கட்டுமானத்தைப் பெரிதும் முன்னேற்றுவது, அழகான சீனாவை உருவாக்குவது ஆகியவை, புதிய காலத்தில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டி கொண்டுள்ள சிறந்த கருத்துக்களாகும் என்று அவர் கூறினர்.