சோஷலிச சந்தைப் பொருளாதார அமைப்பு முறையின் முழுமையாக்கத்தையும், பொருளாதார வளர்ச்சி முறையின் மாற்றத்தையும் விரைவுபடுத்த வேண்டும் என்று சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 18வது தேசிய மாநாட்டின் அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக வெளிநாடுகளின் பல்வேறு துறைகளைச் சேர்ந்த பிரமுகர்களும் செய்தி ஊடகங்களும் இதில் பெரும் கவனம் செலுத்தி வருவதோடு, இக்குறிக்கோளின் நனவாக்கம், சீனப் பொருளாதாரத்தின் இயக்கு ஆற்றலையும் போட்டியாற்றலையும் உயர்த்துவது உறுதி என்றும் கருத்துத் தெரிவித்தனர்.
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழு உறுப்பினரும், இந்திய நாடாளுமன்றத்தின் மேல் அவை உறுப்பினருமான யச்சூரி சீனச் செய்தியாளருக்குப் பேட்டியளித்தார். சீனச் சோஷலிச ஜனநாயகம் மற்றும் நல்லிணக்கச் சமூகத்தின் கட்டுமானத்தை மேம்படுத்துவது, நகரத்துக்கும் கிராமப்புறத்துக்கும் இடையிலான இடைவெளியையும் வருமான இடைவெளியையும் குறைப்பது, சீன உள்நாட்டுத் தேவை மற்றும் வளர்ச்சியை தூண்டுவது, பல்வேறு இடங்களின் சமமான வளர்ச்சியையும் கூட்டுச் செழுமையையும் நனவாக்குவது ஆகியவற்றுக்கு, 18வது தேசிய மாநாட்டின் அறிக்கையில் முன்வைக்கப்பட்ட கோட்பாடு பங்களிக்கும் என்று அவர் கூறினார்.