சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 18வது தேசிய மாநாட்டின் செய்தி மையம் 13ஆம் நாள் பிற்பகல் முதல் இணையதளக் கலந்துரையாடலை நடத்தியது. சீனாவின் நீதி சட்ட நியாயம் என்ற தலைப்பில் நடைபெற்ற இப்பேச்சுவார்த்தையில், சீனாவின் மக்கள் உச்ச நீதி மன்றம், மக்கள் உச்ச வழக்கறிஞர் மன்றம், சீனச் சட்ட நீதி அமைச்சகம் ஆகியவற்றைச் சேர்ந்த 18வது தேசிய மாநாட்டுப் பிரதிநிதிகள் மூன்று பேர் இணையதளத்தின் மூலம் இணையப் பயபாட்டார்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தனர்.
சட்ட நியாயம், சட்டக் கண்காணிப்பு முதலிய பிரச்சினைகள் இக்கலந்துரையாடலில் முக்கியமாக விவாதிக்கப்பட்டன.