சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 18வது தேசிய மாநாடு 14ஆம் நாள் முற்பகல் வெற்றிகரமாக நிறைவடைந்தது. சுதந்திரச் சிந்தனையுடன் சீர்திருத்தம் மேற்கொண்து வெளிநாட்டுக்குத் திறந்து, ஆற்றலைத் திரட்டி, இன்னல்களைச் சமாளித்து, சீனத் தனிச்சிறப்பு வாய்ந்த சோஷலிசப் பாதையை உறுதியாகப் பின்பற்றி, ஓரளவு வசதியான சமூகத்தை முழுமையாக உருவாக்க முயற்சிகளை மேற்கொள்ளுமாறு இம்மாநாடு முழு கட்சியினருக்கும் வேண்டுகோள் விடுத்தது. சீனாவின் இரு நூறு ஆண்டுக்கால தொலை நோக்குத் திட்டத்தை 18வது தேசிய மாநாட்டின் அறிக்கை மீண்டும் வலியுறுத்தியது. அதாவது, சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு நிறைவின் போது, ஓரளவு வசதியான சமூகத்தை உருவாக்குவதை முழுமையாக்க வேண்டும். மேலும், புதிய சீனாவின் நூற்றாண்டு நிறைவு விழாவின்போது, செழுமை, ஜனநாயகம், நாகரிகம், இணக்கம் ஆகியவை படைத்தம் நவீனமான சோஷலிச நாடாகச் சீனா மாற வேண்டும்.
தற்போது, ஓரளவு வசதியான சமூகத்தை முழுமையாக உருவாக்கும் முக்கியமான காலமாத்தில் சீனா இருக்கிறது என்று சீனாவின் சின்குவா செய்தி நிறுவனம் சுட்டிக்காட்டியது.