உலகக் கவனத்தை ஈர்த்து வரும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 18வது தேசிய மாநாடு 14ஆம் நாள் வெற்றிகரமாக நிறைவுற்றது. சீர்திருத்தம் மற்றும் வெளிநாட்டுத் திறப்புக் கொள்கையைச் சீனா மேற்கொண்டு, தேசத்தின் மறுமலர்ச்சியை நனவாக்கும் பாதையில் முக்கிய மைல் கல்லாகவும், சீனத் தனிச்சிறப்புடைய சோஷலிச இலட்சியத்தை முன்னேற்றும் போக்கில் புதிய துவக்கப் புள்ளியாகவும் இம்மாநாடு திகழ்கிறது. உலக வளர்ச்சியிலும் அது முக்கியச் செல்வாக்கை ஏற்படுத்தும்.
சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 18வது தேசிய மாநாடு, சீனாவுக்கும் உலகிற்கும் முக்கியத்துவம் வாய்ந்தது என்று தென்னாப்பிரிக்கக் கம்யூனிஸ்ட் கட்சியின் சர்வதேச உறவுச் செயலாளர் மாட்ஹாக் 13ஆம் நாள் கூறினார்.
ரஷிய அறிவியல் கழகத்தின் தூரக் கிழக்கு ஆய்வகத்தின் தலைவர் பேசுகையில், இந்த மாநாடு சீனாவின் வளர்ச்சிப் பாதையில் புதிய மைல் கல்லாக மாறுவது உறுதி என்று கூறினார். சீனாவின் வளர்ச்சியில் வாய்ப்புகள் அதிகம். சீனா தொடர்ந்து உலகத்துக்கு வியப்பையும் நன்மையையும் கொண்டு வரும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
நெருக்கடிக்குப் பின் உலகப் பொருளாதாரத்தின் மீட்சியைத் தூண்டும் ஆற்றலாக சீனா திகழ்கிறது. இம்மாநாட்டுக்குப் பின் சீனப் பொருளாதாரம் விரைவான வளர்ச்சியை நிலைநிறுத்தி, அமெரிக்காவுக்கும் இதர நாடுகளுக்கும் நன்மை பயக்கும் என்று அமெரிக்காவின் பீட்டர்சன் சர்வதேசப் பொருளாதார ஆய்வகத்தின் மூத்த ஆய்வாளர் ரோடி கருத்துத் தெரிவித்தார்.