சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 18வது தேசிய மாநாடு 14ம் நாள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. கடந்த சில நாட்களில், சர்வதேச சமூகம் இம்மாநாட்டில் கவனம் செலுத்தி, அதனை உயர்வாகப் பாராட்டியது. இம்மாநாட்டில் நிர்ணயிக்கப்பட்ட பல்வேறு முக்கியக் கொள்கைகள், எதிர்காலத்தில் சீனாவின் வளர்ச்சிக்கு வழிகாட்டியுள்ளன. இவை, உலக வளர்ச்சியின் மீதும், அமைதியின் மீதும் செல்வாக்கு செலுத்தும் என்று சர்வதேச சமூகம் கருத்து தெரிவித்தது.
தற்போதைய சிக்கலான உலகப் பொருளாதார மற்றும் அரசியல் நிலைமையில், சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 18வது தேசிய மாநாடு நடைபெற்றது. இம்மாநாடு, சீனாவின் சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கும், பிரதேச மற்றும் உலக வளர்ச்சிக்கும் பங்காற்றியது என்று இலங்கை-சீன நட்புறவு சங்கத்தின் தலைமைச் செயலர் டாமாவாட்னா கூறினார்.