15ஆம் நாள், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி 18வது மத்திய கமிட்டியின் முதலாவது முழு அமர்வில் தலைமைக் குழுவினர்கள் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். சீனாவிலுள்ள இலங்கைத் தூதர் ரஞ்சித் உயன்கோடா, இலங்கை அரசுத் தலைவர் மற்றும் அரசின் சார்பில், சீச்சின்பிங்கின் தலைமையிலான சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் தலைமைக் குழுவினருக்கு உளமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்தார். மேலும், இலங்கை ஐக்கியத் தேசிய கட்சியின் தலைவர் ரனில் விக்கிரமசிங்கவும், வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
சீனக் கம்யூனிஸ்ட் கட்சி 18வது தேசிய மாநாட்டில் நிறைவேற்றியுள்ள அம்சங்கள், வலிமையான, அழகான சீனாவைக் கட்டியமைப்பதற்கு முக்கிய செல்வாக்கை ஏற்படுத்துவது உறுதி. சர்வதேசச் சமூகத்தின், குறிப்பாக, ஆசிய பிரதேசத்தின் அமைதி, வளர்ச்சி மற்றும் நிதானத்துக்கு ஆக்கப்பூர்வ முக்கியத்துவம் வாய்ந்தது என்று ரணில் விக்கிரசிங்க தெரிவித்தார்.