சீன வானொலி தமிழ் ஒலிபரப்பின் நேயர்கள் தொலைபேசி, இணையம், மின்னஞ்சல் ஆகியவற்றின் மூலம் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 18வது தேசிய மாநாடு மீதான அக்கறையை வெளிப்படுத்தினர்.
புதிய தலைமுறைத் தலைவர்களின் பண்பட்ட தொலை நோக்குச் சிந்தனையில் சீன-இந்திய உறவின் வளர்ச்சியில் நெருங்கி வருவதும் இரு நாட்டு மக்களும் நட்பார்ந்த ஒத்துழைப்பில் ஊன்றி நின்று ஆசிய ஆப்பிரிக்க நாடுகளுக்கு வழிகாட்டியாகவும், சொப்பனமாகவும் திகழும் நாள் விரைவில் மலரும் என்று புதுக்கோட்டை ஜி வரதராஜன் கருத்து தெரிவித்தார்.
மாநாடு எதிர்காலத்தில் சீன மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதிலும் சீன மக்களின் நலனைப் பேணிக் காப்பதிலும் மிக முக்கியமான இடத்தைப் பெற்றிருக்கின்றது என்றால் மிகையாகாது வெற்றிகரமாக முடிந்த இத்தேசிய மாநாட்டிற்கு எனது வாழ்த்துக்கள் என்று திண்டுக்கல் கே.வேலுசாமி தெரிவித்தார்.
சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய தலைவர்களின் பணிகள் சிறப்படைய என் மனமார்ந்த நல்வாழ்த்துகளை நான் அன்புடன் தெரிவித்துகொள்கிறேன் என்று பகலாயூர் ப.எ.நாச்சிமுத்து தெரிவித்தார்.