சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 18வது தேசிய மாநாடு நவம்பர் 14ஆம் நாள் பெய்ஜிங்கில் வெற்றிகரமாக நிறைவடைந்தது. இதற்கு மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவிக்கும் வகையில், மேலும் அருமையான எதிர்காலத்தைக் கூட்டாக உருவாக்குவதென்ற தலைப்பிலான கட்டுரை ஒன்றைச் சீன மக்கள் நாளேடு 15ஆம் நாள் வெளியிட்டது.
சீனா, ஓரளவு வசதியான சமூகத்தைப் பன்முகங்களிலும் கட்டியமைக்கும் முக்கியமான கட்டத்தில் இம்மாநாடு நடைபெற்றது. இத்திட்டத்தை நனவாக்குவதற்கு புதிய உந்து ஆற்றலையும் அது தந்துள்ளது. சீன மக்கள் மற்றும் சீன தேசம் மேலும் அருமையான எதிர்காலத்தைக் கூட்டாக உருவாக்குவதை அது துவக்கியுள்ளது.