4வது சீன-தெற்காசிய சர்வதேச பண்பாட்டுக் கருத்தரங்கு அண்மையில் சீனாவின் சென்சேன் நகரில் நடைபெறுகிறது. சீனாவையும் இந்தியாவையும் பிரதிநிதியாக்கும் கிழக்குப் பண்பாட்டு ஒருங்கிணைப்பு மற்றும் வளர்ச்சி, மேலைப் பண்பாட்டின் ஏகபோகத்தை முறியடித்து, உலக நாகரிகத்தின் வளர்ச்சியை முன்னேற்றுவதற்குத் துணை புரியும் என்று இதில் கலந்து கொண்டுள்ள சீனா மற்றும் இந்தியாவின் அறிஞர்கள் ஒருமனதாகக் கருத்து தெரிவித்தனர்.
பழைமை பெறும் நாகரிகச் சிறப்பு வாய்ந்த நாடுகளான சீனாவும் இந்தியாவும், ஒன்றிடம் ஒன்று கற்க விரும்புகின்றன. சமூகம், அரசியல், பொருளாதாரம் ஆகியத் துறைகளில் இரு நாடுகளுக்கிடையில் ஆக்கப்பூர்வச் செல்வாக்கு மற்றும் பரிமாற்றம் இருக்கின்றன என்று இந்தியாவின் சீன ஆய்வகத்தின் பேராசிரியர் வினோத் சி கன்னா கருத்து தெரிவித்தார்.