2015ஆம் ஆண்டுக்குள், ஃபூசோ நகரில் மல்லிகைப்பூவின் நடுதல் பரப்பளவு ஈராயிரம் ஹெக்டரையும், அதன் விளைச்சல் ஆண்டுக்கு 15 ஆயிரம் டன்னையும் எட்ட வேண்டும். மல்லிகைப்பூத் தொடர்பான ஒத்துமொத்த உற்பத்தி மதிப்பு 300 கோடி யுவானை அடைவதில் முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் என்று ஃபூசோ நகரின் துணைத் தலைவர் யென் கே ஷி கூறினார்.
ஃபூசோ நகரின் மல்லிகைப்பூத் தேயிலைக்கு உலகின் புகழ்பெற்ற தேயிலை என்ற பெயரைச் சர்வதேச தேயிலை ஆணையம் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.