சீனாவின் திபெத்தில் வசிக்கும் விவசாயிகள் மற்றும் ஆயர்களின் வீட்டு வசதியை மேம்படுத்தும் நோக்கிலான திட்டப்பணிக்கு, 2012ஆம் ஆண்டு இறுதி வரை 2460கோடி யுவான் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 4லட்சத்து 10ஆயிரம் குடும்பங்கள் இத்திட்டப்பணியில் சேர்க்கப்பட்டன. சுமார் 21லட்சம் விவசாயிகளும் ஆயர்களும் இந்த புதிய வீட்டு வசதிகளால் பயன் பெற்றுள்ளனர்.
இவ்வாண்டு 87 கோடியே 50லட்சம் யுனான் மேலதிகமாக ஒதுக்கீடு செய்யப்படும். திபெத் தன்னாட்சிப் பிரதேசம் முழுவதிலும் வீட்டு வசதி மேம்பாட்டுத் திட்டப்பணி நிறைவேற்றப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.