யூன்நான் மாநிலத்தின் ச்சென் சியோங் மாவட்டத்தில் நிகழ்ந்த மலைச் சரிவில் கடைசியான காணாமல் போனோரின் பூதவுடல்கள் அனைத்து 12ஆம் நாள் 11:50 மணிக்குக் கண்டறியப்பட்டிருந்தன. இதில் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 46 என்று உறுதிப்படுத்தப்பட்டது. காணாமல் போயினரைக் கண்டறிந்து பாதுகாக்கும் பணி முடிந்தது.
உயிரிழந்தோர்களின் அடையாளம் உறுதி செய்யப்பட்டிருந்ததாக உள்ளூர் அரசு தெரிவித்தது.
எல்லா உயிரிழந்தோர்களின் குடும்பங்களுக்கும் தலா 10 ஆயிரம் யுவான் அஞ்சலி நிதியுதவியை வழங்குவதாக யூன் நான் மாநிலத்தின் சௌ தோங் நகரின் தலைவர் லியூ ச்சியான்குவா கூறினார்.
பேரிடர் நீக்க மற்றும் உயிர் மீட்புப் பணிக்கு நேரடியாக வழிகாட்டும் வகையில், சீன நிலம் மற்றும் மூலவள அமைச்சகம், சீனப் பொதுத்துறை அமைச்சகம் முதலிய அமைப்புகள் அனுப்பிய அரசவைப் பணிக்குழு 12ஆம் நாள் விடியற்காலை 4 மணி இந்த மலைச் சரிவு பாதிக்கப்பட்ட பிரதேசத்துக்குச் சென்றடைந்துள்ளது.