• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஜப்பானியத் தலைமையமைச்சரின் கூற்று பற்றி சீனாவின் கருத்து
  2013-01-12 18:30:15  cri எழுத்தின் அளவு:  A A A   
தற்போது, சீன-ஜப்பானிய உறவு கடும் சிக்கலில் சிக்கிக்கொண்டதற்கு காரணம் ஜப்பானின் ஒருசார்பு செயலாகும். ஜப்பானிய தரப்பு உண்மையை சரிவர நோக்கி, நல்லிணக்கத்தைக் காட்டி, தொடர்புடையப் பிரச்சினைகளை பயனுள்ள முறையில் தீர்க்க முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்று சீன வெளியுறவு அமைச்சின் செய்தித்தொடர்பாளர் ஹோங் லெய் தெரிவித்துள்ளார்.
ஜப்பானியத் தலைமையமைச்சர் Shinzo Abe 11ம் நாள் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில், கடந்த ஆண்டு சீனாவில் நடைபெற்ற ஜப்பான் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தைக் குற்றச்சாட்டியதோடு, தியாவ் யூ தீவுப் பிரச்சினையின் தீர்வுக்கு விவாதிக்கும் வாய்ப்பு இல்லை என்று தெரிவித்தார். 11ம் நாள் பெய்சிங்கில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் இது பற்றி செய்தியாளரின் கேள்விக்குப் பதிலளித்த போது, தியாவ் யூ தீவும், இதனை இணைந்த தீவுகளும், பண்டைக்காலம் தொட்டு, சீனாவுக்குரிய உரிமைப் பிரதேசமாகும் என்றும், வரலாறு மற்றும் சட்ட ரீதியில் இது தெளிவானது என்றும் ஹோங் லெய் மீண்டும் தெரிவித்தார்.
தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040