சீனாவின் முதலாவது இடபெயரும் பறவைகள் மருத்துவமனை அண்மையில் ச்சியாங் சி மாநிலத்திலுள்ள போ யாங் ஏரி பாதுகாப்புப் பிரதேசத்தில் கட்டியமைக்கப்பட்டது. சமூக சேவகி லீ சுன்ரூ, சீன இடபெயரும் பறவைகள் பாதுகாப்பு வாரியங்கள், சமூகப் பிரமுகர்கள் ஆகியோர் சேர்ந்து இந்த மருத்துவமனையை ஏற்பாடு செய்து கட்டியமைத்தனர். போ யாங் ஏரி சீனாவின் மிகப் பெரிய நன்னீர் ஏரியாகமும் உலகில் மிக முக்கிய சதுப்பு நிலப் பாதுகாப்புப் பிரதேசமாகவும் உள்ளது. ஒவ்வொரு ஆண்டின் அக்டோபர் முதல் ரஷியா, மங்கோலியா, ஜப்பான், வட கொரியா,சீனாவின் வடகிழக்கு மற்றும் வடமேற்கு பிரதேசத்திலிருந்து புறப்பட்ட சுமார் 300 வகைகளைச் சேர்ந்த 6,7 இலட்சம் இடபெயரும் பறவைகள் இங்கே வந்து, அடுத்த ஆண்டின் ஏப்ரல் திங்கள் வரை தங்கியிருக்கின்றன.