• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
மூடுபனியைச் சமாளிக்க பெய்சிங் மாநகரின் நடவடிக்கை
  2013-01-13 16:39:21  cri எழுத்தின் அளவு:  A A A   

சீன மத்திய வானிலை நிலையம் கடும் மூடுபனியால் 13ம் நாள் மஞ்சள் முன்னெசரிக்கையை வெளியிட்டது. 13ம் நாள் பெய்சிங், தியேன் ஜிங், ஹெர்பெய், ஹெனான், சியாங சு உள்ளிட்ட பிரதேசங்களில், மூடுபனியால் மக்கள் ஆயிரம் மீட்டருக்கு அப்பாலுள்ள கட்டிடங்களைத் தெளிவாகக் காண இயலவில்லை என்றும், நகரங்களில் காற்றுத் தரம் மிக மோசமாக உள்ளது என்றும் காலநிலை நிபுணர்கள் தெரிவித்தனர்.
11ம் நாள் முதல், மேற்கூறிய பிரதேசங்கள் கடும் மூடுபனியால் பாதிக்கப்பட்டன. பெய்சிங் மாநகரின் கல்வி வாரியம் 12ம் நாள் அவசர திட்டத்தை மேற்கொள்ளத் துவக்கி, பெய்சிங்கில் ஒரு பகுதி பிரதேசங்கள் மற்றும் மாவட்டங்களில் உள்ள பள்ளிகளில், திறந்த வெளியில் மேற்கொள்ளும் மாணவர்களின் உடற்பயிற்சியை நிறுத்த வேண்டும் என்று கோரியது.
புதிய வானிலை முன்னறிவிப்பின்படி, 16ம் நாள் பெய்சிங்கில் காற்று வீசவுள்ளது. மூடுபனி முடிவுக்கு வந்து, காற்று தர மேம்படக்கூடும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040