சீனாவில் பெய்ஜிங், ஹெபெய், ஹெநான், ஷான்துங், குவாங்ஷி உள்ளிட்ட இடங்களில் பெரும் அளவிலான கடும் மூடுபனி வானிலை நிலவுகிறது. பொது மக்களுக்கு இயல்பான வாழ்க்கையும் பணிகளும் பாதிக்கப்பட்டுள்ளன. இத்தகைய கடும் காற்று மாசுபாடுகளைச் சமாளிக்கும் வகையில், பல்வேறு இடங்களில் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கடும் மூடுபனி வானிலையால் காற்றுத் தரம் தெளிவாக குறைந்துள்ளது. பொது மக்கள் உடல் நலத்தை பேணுவதற்காக உரிய தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வானிலை ஆய்வு மையம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
தவிரவும், விமான நிலையம், உயர்வேக நெடுஞ்சாலை, துறைமுகம் போன்ற போக்குவரத்து வசதிகளில் பாதுகாப்பை உறுதி செய்யும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.