• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
5வது சீன-இந்திய பாதுகாப்பு அமைச்சகக் கலந்தாய்வு
  2013-01-14 18:47:35  cri எழுத்தின் அளவு:  A A A   
சீன மற்றும் இந்திய பாதுகாப்பு அமைச்சகங்களின் 5வது இடர்காப்பு மற்றும் பாதுகாப்புக் கலந்தாய்வு 14ஆம் நாள் பெய்ஜிங்கில் நடைபெற்றது. பிரதேச பாதுகாப்பு, இரு நாட்டு மற்றும் இரு நாட்டு ராணுவங்களிடை உறவு, பொது அக்கறை கொண்ட பிரச்சினைகள் ஆகியவை பற்றி இரு தரப்புகளும் ஆழமாக விவாதித்து, இரு தரப்புப் பரிமாற்றத்தையும் ஒத்துழைப்பையும் உயர்வாக மதிப்பிட்டன.
சீன விடுதலைப் படையின் துணைத் தலைவர் ச்சி சியேன் கோவ், இந்திய பாதுகாப்புச் செயலாளர் ஷாஷிகாண்ட் ஷார்மா ஆகிய இருவரும் இக்கலந்தாய்வுக்குத் தலைமை தாங்கினர்.
சீன-இந்திய உறவு சீனாவின் தூதாண்மை உறவுகளில் மிக முக்கியமான ஒன்றாகும். சமத்துவம், நம்பிக்கை, ஒத்துழைப்பு, கூட்டு வெற்றி ஆகியவை படைத்த நெடுநோக்கு கூட்டாளியுறவை இந்தியாவுடன் இணைந்து உருவாக்க சீனா விரும்புவதாக ச்சி சியேன் கோவ் தெரிவித்தார்.
இரு நாட்டுப் படைகளுக்கிடை பேச்சுவார்த்தையையும் பரிமாற்றத்தையையும் மேலும் வலுபடுத்த இந்தியா விரும்புவதாக ஷாஷிகாண்ட் ஷார்மா தெரிவித்தார்.
தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040