காற்றுத் தரக் கண்காணிப்பின் முடிவு, வாநிலை முன்னறிவிப்பு ஆகியவற்றின்படி, தற்போது சீனாவின் வடக்கு மற்றும் மத்திய கிழக்கு பகுதிகளில் நிலவுகின்ற மூடுபனி வாநிலை தொடர்ந்து வருகிறது. இதனால் விளையும் மாசுப்பாடு, பல பிரதேசங்களில் பொது மக்களின் வாழ்வுக்கும், உடல் நலத்துக்கும் மோசமான பாதிப்புக்களை ஏற்படுத்தி வருகிறது. கடும் மாசுப்பாட்டு வாநிலையைச் சமாளிப்பதில் பல்வேறு நிலை பிரதேச அரசுகள், காற்றுத் தரக் கண்காணித்து அளவிட்டு, முன்னறிவிப்புப் பணியைச் செவ்வனே செய்ய வேண்டுமென சீனச் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைச்சகம் 14ஆம் நாள் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் கோரிக்கை விடுத்துள்ளது.
ஒலிப்பரப்பு, தொலைக்காட்சி, இணையம், செய்தித்தாள் முதலிய ஊடக வகைகளின் மூலம், பாதிக்கப்பட்ட இடங்களிலுள்ள பொது மக்களுக்கு, காற்றுத் தரத் தகவல்களை காலதாமதமின்றி வெளியிட்டு, அவர்களின் சுற்றுச்சூழல் நிலைமை தகவல் அறியும் உரிமைக்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்று இவ்வறிக்கை கோருகின்றது.