• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
புகை மாசுபாடு தடுக்க சீனா முயற்சி
  2013-01-15 10:33:01  cri எழுத்தின் அளவு:  A A A   

வாகனங்களிலிருந்து வெளியேறும் புகை மாசு, காற்று தரம் மற்றும் மக்களின் உடல் நலத்தைப் பாதிப்பதைத் தடுக்கச் சீனா பெரிதும் முயற்சி மேற்கொள்ளும் என்று சீனச் சுற்றுசூழல் பாதுகாப்பு அமைச்சகம் ஜனவரி 14ஆம் நாள் தெரிவித்தது.

சீனாவின் வாகன உற்பத்தி மற்றும் விற்பனை எண்ணிக்கை உலகில் தொடர்ந்து 3 ஆண்டுகளாக முதலிடம் பெற்று வருகிறது. வாகனங்கள் விளைவிக்கும் மாசுபாடுகள், காற்றை மாசுபடுத்துவதில் முக்கிய பங்காற்றுகின்றன. கண்காணிப்பின்படி, சீனாவின் நகர வளிமண்டலத்தில் நிலக்கரி புகையும், வாகனங்கள் வெளியேறும் புகையும் கலந்த மாசுபாடு தோன்றியுள்ளது. அது மக்களி்ன் உடல் நலத்துக்கு மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்துகின்றது.

தொழிற்துறைகளின் வளர்ச்சிக் கட்டம், நகரப் பொதுப் போக்குவரத்து, தூய்மையான எண்ணெய் வினியோகம் ஆகிய துறைகளில், சீனா பன்நோக்க கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டு, வாகனங்கள் வெளியேறும் புகை மாசுகளைப் பெரிதும் தடுக்கும் என்று சீனச் சுற்றுசூழல் பாதுகாப்பு அமைச்சகச் செய்தித் தொடர்பாளர் தாவ் சித்தியன் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040